அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம் !காரணம் எனக்கு  தெரியாது!அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார்.

முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது  மணிகண்டன் பதவியில்  இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கூறுகையில்,அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட முடிவு ஆகும். நீக்கத்திற்கான காரணம் எனக்கு  தெரியாது என்று தெரிவித்தார்.