- நேற்று ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
- மாணவ அமைப்பினர் நடத்திய தர்னாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனிடையே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமைத் திருத்தச் சட்டம்,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன்.இதற்கு பின்னர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு நடத்தும் தர்னா போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.