ராஜிவ்குமார் மீது நடவடிக்கை ” உள்துறை அமைச்சகம் கடிதம் ” திணறும் மமதா அரசு….!!

ராஜிவ்குமார் மீது நடவடிக்கை ” உள்துறை அமைச்சகம் கடிதம் ” திணறும் மமதா அரசு….!!

கொல்கத்தா ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் கொல்கத்தா காவல் ஆணையயர் ராஜீவ்குமாரும் பங்கேற்றார்.

இந்நிலையில் , கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.அதில் போலீஸ் அதிகாரிக்கு என்று மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.அந்த விதியில் போலீஸ் அதிகாரி அரசியல் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மமதா நடத்தும் போராட்டத்தில் கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் கலந்து கொண்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சகம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *