” 15 நாட்களில் மக்களவை தேர்தல் ” மமதா பானர்ஜி கருத்து….!!

டெல்லியில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு கொல்கத்தாவில் செய்தியாளர்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு காலாவதியாகிவிட்டது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வர போவதில்லை என்று மோடிக்கே தெரியும் . ஒன்றுபட்ட இந்தியாவை தான் மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். இன்னும் 15 நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment