வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம்!

வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம்!

வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம்.

வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை மாநிலத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ், சிபிஐ (எம்) மற்றும் பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் பிமான் பானர்ஜியும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இக்கூட்டமானது முதல்வர் தலைமையில் நடைபெற்று மூன்று மதத்திற்கு பின், மீண்டும் கூடவுள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பதாக அங்கு 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 58 வயது முதியவர் ஒருவர் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்தால் காலமானார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மொத்தம் 14,358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 569  பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, முதலமைச்சர் மம்தா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவதால், வங்காளத்தின் எண்ணிக்கை கணிசமாக உயரும், ஆனால் அதே நேரத்தில், மாநில அரசு முழுமையாக தயாராக இருப்பதால் குடிமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் உறுதியளித்திருந்தார்.

இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube