இலங்கையை விட்டு வெளியேறும் மலிங்கா!

இலங்கை அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளர் மலிங்கா 35 வயதான இவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதுவரை மலிங்கா ஓய்வை பற்றிய ஒரு தகவலும் வெளியிட வில்லை .

இந்நிலையில் பங்களாதேஷ் அணி இலக்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கான ஒருநாள் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்க உள்ளது.இப்போட்டி முடிந்த பிறகு மலிங்கா தனது ஓய்வை அறிவிக்க உள்ளார்.

Image result for மலிங்கா

இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார்.அதற்காக ஒரு வீட்டையும் வாங்கி உள்ளார்.உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா சென்ற மலிங்கா நாளை தான் இலங்கை வரவுள்ளார்.

மேலும் ஓய்விற்கு பிறகு பயிற்சியாளர் பணியில் ஈடுபட உள்ளதாகவும் இதற்காக தனது நண்பர்களிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
murugan