ஐபிஎல் போட்டியில் ஒருவாரம் மலிங்கா விளையாடுவது கடினம் தான்.!

ஐபிஎல் போட்டியில் ஒருவாரம் மலிங்கா விளையாடுவது கடினம் தான்.!

பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் லசித் மலிங்கா விளையாடவுள்ளதால் அவரால் ஐபிஎல் தொடங்கிய  முதல் வாரம் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.மேலும் ஐபிஎல் தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று சமீபத்தில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள், மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒரு வாரம் மட்டும் கிரிக்கெட் விளையாடுவது கடினம் என்று தகவல் வெளியகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்ச்சத்திர வீரராக திகழ்பவர் லசித் மலிங்கா, இவர்  செம்படம்பர் மாதம் 20ம் தேதி நடக்கவுள்ள லங்கான் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் லசித் மலிங்கா விளையாடவுள்ளார், இதனால் அவரால் ஐபிஎல் தொடங்கிய  முதல் வாரம் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube