#Breaking: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம்!

சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் மகேஷ் குமார் அகர்வால், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு குழுவில் சென்னை வடக்கு மண்டல சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.