தளபதிக்கே சவால் விடுத்த மகேஷ் பாபு.!

மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன், அதை செய்ய தளபதி, ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மிகவும் வைரலாகி வரும் கிரீன் இந்தியா சேலன்ஜை செய்து மகேஷ் பாபு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆம் தனது வீட்டில் மரத்தை நட்டு தனது சேலன்ஜை முடித்துள்ளார்.

அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த மகேஷ் பாபு, தனது பிறந்தநாளை கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்க முடியாது என்று கூறியதுடன், விஜய், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதிஹாசனை டேக் செய்து சேலன்ஜ் விடுத்துள்ளார். மேலும் பசுமையான உலகத்தை நோக்கிய ஒரு படி என்று பதிவிட்டுள்ளார். தளபதிக்கு சவால் மகேஷ் பாபுவின் இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சூப்பர் ஸ்டாரின் சவாலை தளபதி ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.