மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 4878 பேர் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 4,878  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 4,878  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,74,761 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 245 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,855 ஆக உயர்ந்துள்ளது. 1,951 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 90,911 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 75,979 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.