போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்ரே இன்று சட்டமேலவை உறுப்பினராக பதவியேற்பு…

போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்ரே இன்று சட்டமேலவை உறுப்பினராக பதவியேற்பு…

Default Image

மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 6 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் அல்லது மேலவை உறுப்பினராக தேர்வானால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது வந்தது.

இந்நிலையில், வரும் மே 21 -ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதன் மூலம் தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே தக்கவைத்துள்ளார் இந்நிலையில், இன்று மகாராஷ்ட்டிரா மாநில சட்ட மேலவை தேர்தலில், போட்டியின்றி தேர்வான முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 8 பேர், மகாராஷ்டிர  சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சி  மும்பை விதான் பவனில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில், மேலவை தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பால்கர், உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட 9 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Join our channel google news Youtube