மஹாராஷ்டிரா துணை முதல்வருக்கு எதிராக சரத்பவார் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மஹாராஷ்டிரா அரசியல் களம் மணிக்கொருமுறை திடுக்கிடும் அரசியல் திருப்பங்களோடு நகர்ந்து வருகிறது. நேற்று இரவு வரை,  சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார்  என கூறப்பட்டு வந்தது.
ஆனால் இன்று திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இதற்க்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சரத்பாவர் ஆதரவாளர்கள் மஹாராஷ்டிராவில் அஜித்பவாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.