மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 230 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. முதலில் மும்பையில் ஒருவருக்கும், புனே மற்றும் புல்தானா பகுதிகளில் தலா இருவருக்கும் என மொத்தமாக 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்த நிலையில், தற்போது மும்பையில் மேலும் 4 பேருக்கும், புனேவில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்