அருண் விஜய் தற்போது பாக்ஸர் மற்றும் மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறர். இதில் பாக்ஸர் படத்தில் குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து மாஃபியா எனும் படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளார். இதில் பிரசன்னாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்டைலாக பிரசன்னா இருக்கிறார்.