மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன்.!

மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை.

மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் மதுரை அம்மா உணவகங்களில் கட்டணமில்லாமல் உணவு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கேட்டுகொன்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.