சென்னை: இளைஞர்கள் கஞ்சா போதையில் தந்தை , மகனை கத்தியால் குத்தினார்..!

நாட்டன் தோட்டம்  பகுதியை சேர்ந்த அருள் தமிழரசன் மற்றும் மனோஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் , மது குடித்து  விட்டு பொதுமக்களும் தகராறு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து வந்த மணிகண்டன் என்பவரிடம் மூவரும்  தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென அருள், தமிழரசன் இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தினர். இதை பார்த்த மணிகண்டன் தந்தை குமார் தடுக்க முயன்றுள்ளார்.அப்போது  அவரையும் கத்தியால் குத்திவிட்டு மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

காயம் அடைந்த தந்தை , மகன் இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மனோஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

author avatar
murugan