டிவிட்டரில் தமிழ் இலக்கணம் கற்று தருகிறார் பாடலாசிரியர் விவேக் !

விவேக் வெல்முருகன், இந்திய திரைப்பட பாடலாசிரியர். இவர் தமிழில் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2015ம் ஆண்டு ‘எனக்குல் ஒருவன்’ படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகினார். இதன் பிறகு 36 வயதினிலே, ஜில் ஜங் ஜுக், மெர்சல் மற்றும் சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் பிகில் படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது டிவிட்டரில் நேற்று தமிழ் இலக்கணந்தை கூறியுள்ளார்.
“உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஓர்” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஓர் ஆயிரம், ஓர் இரவு
உயிர்மெய் (மெய்) எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் “ஒரு” பயன்படுத்த வேண்டும்
எ.கா. – ஒரு கருவி, ஒரு பறவை
(வருமொழி உயர்திணையாயின் நிலைமொழி மாறும்) ”  என ட்விட் செய்துள்ளார்.

author avatar
Vidhusan