இவர்கள் இருவருக்கும் இடையே காதலா? வதந்திகளால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதையும் சிலர் நம்பி, அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த கேள்விகளுக்கு, இருவருக்கும் இடையே காதல் இல்லை என பதிலளித்த பிறகும், வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது. இதனையடுத்து, ராஷ்மிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘நாங்கள் இருவரும் செய்கிற தொழில் முழுமையாக ஒன்றி போகிறோம் என்றும், 2 படங்களில் சேர்ந்து படித்தோம் என்றும், எங்களுக்குள் காதல் இல்லை, இன்னும் 2 ஆண்டுகள் நாங்கள் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க மாட்டோம், இதற்க்கு மேலாவது இந்த காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.’ என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.