பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூரில் இன்று வாக்குப்பதிவு!

பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூரில் இன்று வாக்குப்பதிவு!

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.

வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது.வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இன்று பிரச்சாரம் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube