மக்களவை தேர்தல் 2019:இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

மக்களவை தேர்தல் 2019:இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

  • தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மக்களவை தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் 19-ஆம்  தேதி) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

Image result for திமுக அதிமுக

மக்களவை தேர்தலுக்கு அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் 19-ஆம்  தேதி) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *