மக்களவை தேர்தல் 2019:இன்று திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

  • தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • 2019 மக்களவை தேர்தலையொட்டி இன்று (மார்ச் 20ஆம் தேதி) திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.மேலும் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.  அதேபோல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிலையில் .2019 மக்களவை தேர்தலையொட்டி இன்று(மார்ச் 20ஆம் தேதி) திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Leave a Comment