மக்களவை  துணை சபாநாயகர் தம்பித்துரை அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி..! மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.ஆனால் மாநில அரசு முன்வர வேண்டும்.மேலும்  மக்களவை  துணை சபாநாயகர் தம்பித்துரை, வருகிற மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறிவருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்று மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment