#BREAKING : நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.