இந்தந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன. 
  • நீலகிரி, திருச்சி, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்  வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், நீலகிரி, திருச்சி, கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி  வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் போன்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.