உள்ளாட்சித் தேர்தல் – இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

உள்ளாட்சித் தேர்தல் – இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

  • தமிழகத்தில் ஊரக – உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • இன்று  ( 30-ஆம் தேதி) 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதற்கட்ட தேர்தல் தேர்தல் 27 ஆம் தேதியும் ,2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.இதனை தொடர்ந்து முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்த முதற் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த 28 ஆம் தேதி பரப்புரை ஓய்ந்தது.இதனையடுத்து இன்று  ( 30-ஆம் தேதி) 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Join our channel google news Youtube