உள்ளாட்சி தேர்தல் : நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 
  • நடத்தை விதிமுறைகள் இன்றுடன்  முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில்  உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு வெளியான முதலே தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி 2 கட்டங்களாக தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு நடைபெற்று முடிந்துள்ளது.எனவே தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,உள்ளாட்சி தேர்தலுக்காக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக  மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.