மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து! பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு!

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து! பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு!

மதுரை பட்டாசு ஆலை வெடி விபத் தில், பட்டாசு ஆலை மேலாளர்  உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் பட்டாசு அலை இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் பட்டாசு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மதுரை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர், போர்மேன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட போர்மேன் சுந்தரமூர்த்தி 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube