உள்ளாட்சித் தேர்தல் – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இந்தநிலையில் தான் வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக   செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பை வெளியிட தடை கோரியிருந்தார். மேலும் உள்ளாட்சித்  தேர்தலில்  பட்டியலின ,பழங்குடியினர் பெண்களுக்கு துணை மேயர் துணைத்  தலைவர்  உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்று இவரது வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.அதில், ஜனவரி 7-ஆம் தேதிக்குள்  தமிழக அரசு மற்றும்  மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.