உள்ளாட்சித் தேர்தல் -கட்சிகளுடன் நாளை ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் -கட்சிகளுடன் நாளை ஆலோசனை

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 
கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.ஆனால் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
இந்த நிலையில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது . உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நாளை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.சென்னை கோயம்பேட்டில் நாளை காலை 11.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்

Join our channel google news Youtube