உள்ளாட்சித் தேர்தல் -போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கலாம் -நாம் தமிழர் கட்சி

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்க வேண்டும்.
விருப்ப மனுவை தொகுதிச் செயலாளர், தொகுதித் தலைவரிடம் உடனே வழங்க வேண்டும். வரும் 10ஆம் தேதிக்கு முன்னதாக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.