உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

  • ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது என்று  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தது.மேலும் டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.