உள்ளாட்சித் தேர்தல் :  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

  • தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,இன்று (டிசம்பர் 25 ஆம் தேதி )மாலை 5 மணி முதல் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.