உள்ளாட்சி தேர்தல் : 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல்

  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
  • ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 நாட்களில் 5,001 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று  ஒரே நாளில் 1784 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1456, கிராம ஊராட்சி தலைவர் – 288, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 38 ,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்  டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.