விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி அரியலூர் செந்துறையில் வெற்றி!

  • அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் செல்வி செங்குங்குட்டுவன் வெற்றிபெற்றார். 
  • இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி ஆவார். 

தமிழகத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தற்போது வேகவேகமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த சோபனா ராஜி வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் 1வது வார்டில்  அதிமுகவை சேர்ந்த சாந்தி வெற்றிபெற்றுள்ளார். அரியலூர் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் விருதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி செல்வி செங்குட்டுவன் வெற்றி பெற்றுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டில் தினகரனின் அமமுக கட்சி சார்ந்த சவிதா ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார்.  நாகை  மாவட்டம் கொள்ளிம் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நற்குணம் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.