MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!

சென்னை வீரர் அம்பதி ராயுடு தனது அரை சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் வரும் மும்பை மற்றும் சென்னை இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை சென்னைக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்கக்காரர்களான வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி 37 பந்துக்களுக்கு 60 எடுத்துள்ளார். முதல் போட்டியில் தனது அரை சத்தத்தை அடித்துள்ளார். தற்போது சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது. மறுபக்கத்தில் டு பிளெசிஸ் நிதானமாக விளையாடி, 33 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்