முதல் குண்டு என் மீது பாயட்டும்! அணுக் கழிவு திட்டம் குறித்து இமான் அண்ணாச்சி ஆவேசம்!

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், இமான் அண்ணாச்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக்கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால், முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றும், அந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தினால், முதல் குண்டு என் மீது பாயட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.