தேர்தல் வரட்டும்,நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் – தினகரன்

தேர்தல் வரும்போது  நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தினகரனின் கட்சி போட்டியிடவில்லை.இதற்கு விளக்கமாக அங்கீகாரம் பெற்ற கட்சி, சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்னர் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது

இந்நிலையில் திண்டிவனத்தில் அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தேர்தல் வரும்போது  நிலையான சின்னமும், நல்ல கூட்டணியும் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.