வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நாயை கடித்து உசுப்பி விட்ட சிறுத்தை வைரல் வீடியோ

குஜராத்தில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை கடிக்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
குஜராத் மாநிலத்தில் அமீரலி  பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை ஒன்று  சாவுகாசமாக வந்து அங்கு வீட்டின் வாசல்லில் தூங்கிக்கொண்டிருந்த நாயை கடிக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அப்பொழுது விழித்துக்கொண்ட நாய் சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடுகிறது சிறுத்தையும்  விடாமல் துரத்துகிறது  .
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர அதனை 80,000 க்கு  அதிகமானோர் பார்த்துள்ளனர் பலர் அந்த நாய் குறித்து நலம்விசாரித்து வருகின்றனர் .அந்த சிசிடிவி காட்சியில் சிறுத்தை நாயை கடிப்பதும் அதனை துரத்துவதும்  மட்டும் பதிவாகியுள்ளது அது சிறுத்தையிடமிருந்து தப்பித்ததா என்று தெரியவில்லை இதோ அந்த வீடியோ

author avatar
Dinasuvadu desk