போராட்டத்தில் கலந்து கொள்ளாத காங். முக்கிய தலைவர்கள்..! அதிர்ச்சியில் தொண்டர்கள் ..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து நேற்று இரவு கைது செய்தனர்.டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவன் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த போராட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

author avatar
murugan