வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா !இன்று சட்டபேரவையில் தாக்கல்

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா !இன்று சட்டபேரவையில் தாக்கல்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது

காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர  ஓ.பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர் .இந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா  தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது.

 

 

Join our channel google news Youtube