தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதா? ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார் .சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றால், மாமல்லபுர சந்திப்பின் போது சீனாவிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்தது ஏன்?  என்றும் கேள்வி எழுப்பினார்.