சாலையை கடந்த போது லாரி மோதி உயிர் இழந்த பரிதாபம்..,

சாலையை கடந்த போது லாரி மோதி உயிர் இழந்த பரிதாபம்..,

திருச்சி:அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு  லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.மணப்பாறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜோசப்அருள் லாரியை ஓட்டி வந்தார். நேற்று காலை அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் மருத்துவமனை எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.அப்போது சென்னையிலிருந்து வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் சக்கரத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.அரை மணி நேரம் இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.   பின்னர் விபத்தில் பலியானவர் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *