பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை! கைவரிசை காட்டிய கோமாளி கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட நகைக்கடையாக இருக்கிறது லலிதா ஜிவல்லரி நகை கடை. இந்த நகை கடையில் தான், தரை தளத்தில் மட்டும் 100 கிலோ நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாம்.
இதில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருவர் அந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ள்ளது. அதில் இருவர் கோமாளி போல வேடமணிந்து கைரேகை அணிந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர். இந்த கொள்ளை அதிகாலை 2.11 மணியில் இருந்து 3.15 மணிவரை இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கடையினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.