துரிதமாக செயல்பட்ட திருச்சி காவல்துறையினர்! பிடிபட்ட கோமாளி திருடர்கள்!

திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நேற்று அதிகாலை கொள்ளை கைரேகை அணிந்ததும் தெரிந்தது. சம்பவம் நடைபெற்றது. நகை கடையின் பின்புற சுவரில் துளை போட்டு இருவர் உட்புகுந்து 30 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்தததில், அவர்கள் கோமாளி மாஸ்க் அணிந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வண்ணம் உடை அணிந்தும், கைரேகை பட கூடாது என கையில் உறை அணிந்து கொண்டு தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் மோப்ப நாய்கள் கண்டறிய கூடாது என மிளகாய் பொடி தூவியும் சென்றுள்ளார். இதனால் மோப்ப நாய்கள் கரூர் சாலை வரை சென்று திரும்பின. பின்னர், புதிதிக விடுதிகளில் தங்கியவர்கள், அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்தவர்கள் என பல வகையில் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், சந்தேகப்படும்படியாக விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் பிடித்தனர். அதில் ஒருவர் தப்ப முயன்றதால், அவரை போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில வைத்து விசாரணை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.