பெண்களே! அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது சரும அழகையும், கூந்தலையும் பராமரிப்பதில் அதிகமான நேரத்தை செலவழிப்பதுண்டு. அதற்காக அவர்கள் அதிக அளவிலான பணத்தையும் செலவழிப்பதுண்டு. ஆனால், இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கூந்தல் அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • லாவண்டர் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்

செய்முறை

முதலில் ஒரு பௌலில், 5 துளிகள் லாவண்டர் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அதனுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து, இந்த கலவையை தலையில் நன்றாக தடவ வேண்டும்.

அதன் பின் 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து, பின் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பூவால் தலையை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் அடர்த்தியாக வளருவதை நாமே காணலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.