நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு-தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட  குமரி ஆனந்தன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழக காங்கிரஸ்  கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி கோவையில் நடைபெறும் . தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க உள்ளோம்.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.