#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் இதுவரை 5 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். அதன்படி, ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிழும், கோவை அன்னூரில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தற்பொழுது வரை ரூ.5 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.150 கோடிக்கு சொத்து ஆர்வங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.