தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகின்ற நிலையில், கோவையில் வசந்தா (62) மற்றும் கணேசன் (57) ஆகியோர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.