உலகிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளியை மேடையேற்றி அழகு பார்க்கும் கோடீஸ்வரி! இந்த பெண்ணின் ஆசை நிறைவேறுமா?

  • உலகிலேயே முதன்முறையாக மேடையேறிய மாற்றுத்திறனாளி. 
  • ஒருகோடியை வெல்வாரா? 

ஒவ்வொரு வாரமும் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தங்களது வாழ்க்கையை பல சவால்களோடு எதிர்கொள்ளும், பெண்களை அடையாளம் கண்டு அவர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து, அவர்களது வாழ்க்கைக்கு ஒளியேறுகின்றனர்.

அந்த வகையில், உலகிலேயே முதல்முறையாக காத்து கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி பெண்ணான கவுசல்யாவை மேடையேற்றி உள்ளனர். இந்த மாற்றுத்திறனாளி பெண்ணான கவுசல்யா தன்னுடைய மகனின் குரலை கேட்க வேண்டும் என்பதை தான் தன்னுடைய ஆசையாக கூறுகிறார்.

மாற்றுத்திறனாளியான கவுசல்யா, ஒரு கோடி வரையிலான கேள்வி வரை பதில் சொல்லியுள்ளார். கவுசல்யா ஒரு கோடியை வெல்வாரா என்பது தான் வரும் வாரத்தின் டுவிஸ்ட். பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.facebook.com/ColorsTvTamil/videos/2483547911906717/

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.