ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

ஐபிஎல் டி20 தொடரின் 12-வது போட்டியில் கொல்கத்தா அணியும்  மற்றும் ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் , சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய சுனில் நரைன் 15 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய  நிதிஷ் ராணா 22 , ரஸ்ஸல்  24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, மத்தியில் களம் கண்ட மோர்கன் 34 ரன்கள் விளாசினார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 175 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

author avatar
murugan